தன்னை
அழகாய்த்
தோற்றமழிக்காத
கண்ணாடியை
நிலத்தில் போட்டு
நொறுக்கியும்
தன் எழுத்துக்களின்
நேர்த்தியை
நாசப்படுத்திய
பேனை முனையை
சுவரில் குத்திக்
காயப்படுத்தியும்
கையில் பிடிபட மறுத்த
கிரிகட் போள்மீது
காறித்துப்பி காலால்
உதைத்தும்
போளை அடிக்காமல்
விட்ட
பெட்டை
கொங்கிறீட் கல்லில்
ஊனப்படுத்தியும்
தனக்கு விடை தெரிந்த
வினாவை
பரீட்சைத் தாள்களில்
சேர்க்காமல்
விட்டவனது
தாயின் குறியை
இகழ்ந்தும்
தன்னை
சூழ்ந்துள்ளவைகளினால்
வஞ்சிக்கப்பட்டு......!.??
வக்கிரமாகப்
பழிவாங்கிக் கொண்டும்
விரக்தியுடன்
வாழ்கிறான்
எங்களையும் உங்களையும்
போல் ஒருவன்.







0 comments:
Post a Comment