By Nasenkural.blogspot.com. Powered by Blogger.
RSS


தன்னை
அழகாய்த் தோற்றமழிக்காத
கண்ணாடியை
நிலத்தில் போட்டு நொறுக்கியும்

தன் எழுத்துக்களின் 
நேர்த்தியை நாசப்படுத்திய
பேனை முனையை
சுவரில் குத்திக் காயப்படுத்தியும்

கையில் பிடிபட மறுத்த
கிரிகட் போள்மீது
காறித்துப்பி காலால் உதைத்தும்

போளை அடிக்காமல் விட்ட
பெட்டை
கொங்கிறீட் கல்லில் ஊனப்படுத்தியும்

தனக்கு விடை தெரிந்த
வினாவை
பரீட்சைத் தாள்களில்
சேர்க்காமல் விட்டவனது
தாயின் குறியை இகழ்ந்தும்

தன்னை சூழ்ந்துள்ளவைகளினால்
வஞ்சிக்கப்பட்டு......!.??
வக்கிரமாகப் பழிவாங்கிக் கொண்டும்
விரக்தியுடன் வாழ்கிறான்

எங்களையும் உங்களையும்
போல் ஒருவன்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வறண்ட வாழ்வின் உயிர்ப்பு

கண்ணீர்த் துளி வீழ்ந்து பண்ணிய 
புள்ளியொன்றின் எல்லைக்குள், 
சுதந்திரமாய் 
கைகால் உசுப்பக்கூட 
சந்தர்ப்பம் கிடைக்க மறுத்த 
சபிக்கப்பட்ட வாழ்வு 
நிர்ப்பந்தமாகிவிட்ட பிற்பாடும், 

சிறகுகளின் வீரியத்துடன் 
விண்ணேகிக் கடக்கும் 
கனவுகளும் கற்பனைகளுமே 
வாழ்தலின் மீது 
துப்பணியை உமிழ்ந்தாவது ஈரப்படுத்துகின்றன

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பூச்சியத்துடன் புணர்ந்த காத்திருப்பு

ஓரிரு நாட்கள்தான்..
காத்திரு என்றாய்


காத்திருந்தேன்....


பல வருடங்களும்
வந்தன- கடந்தன..


பல கால்களும் 
கடந்து சென்றன..


ஒரு நாள்
உன் கால்களும்
வந்தன ...


கடந்தன..;


'கிடப்பது எதற்காய் 
என்று கூடக் கேட்காமலே..!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS