By Nasenkural.blogspot.com. Powered by Blogger.
RSS

ஹைக்கூ -கொஞ்சம் சலனம்-





தூரத்து இருளில்
கலர் கலர் வெளிச்சப் பொட்டுக்கள்
வீடு வாகனம் கடை ஹோட்டல்.








குளத்து நீர்ப்பரப்பில்
சிறு கல் விழுந்த சப்தம்
வானமே திடுக்குற்று விழித்துக் கொண்டது.








ஏற்றிவைத்த விளக்கு அணைந்தது
அறையில் 
புத்தகங்களும் இல்லை கண்களும் இல்லை.








பரந்து விரிந்த நீலச்சுவரில்
உயிரிகளுக்காய் உருவான 3Dஓவியங்கள்
மேகங்கள் அசைகின்றன.








மாரிகாலப் பின்னேரப் பொழுதில்
மரத்தின் கீழ் மட்டும் 
ஒரு நொடி மழைச் சீறல்;
வந்த காகம் கிழையில் குந்தியது.








பாலைவனம் நெடுகிலும்
தன் உயிர் தேடித்திரிகிறான்
நீருமில்லை காணலுமில்லை.








பச்சைக் குச்சித் துண்டின் உசுப்பலால்
இலையொண்று அசைகிறது
பாய்ந்து விழுந்த வெட்டுக் கிளி.








காலை நேரக் காகம்
வீட்டுக் கூரை மீதிருந்து கத்துகிறது
வீட்டில் எவருமில்லை.








வீதியால் வந்தவர்களும் போனவர்களும்
வாரிச் சுறுட்டிக்கொண்டு ஓடி ஒதுங்குகிறார்கள்
காற்றும் மழையும் கைகலப்பு.








பரபரத்த இரவின் 
நகரவெளி மீதான அசைவு
உறைந்த அடுத்த நொடி உடைகிறது;
மின்சாரத்தின் கண்சிமிட்டல்.








கெளிந்த தோணியின் 
கிளம்பிய கொல்லாவிலிருந்து கூப்பாடு
குந்தியிருந்த காகம் கத்துகிறது.








இன்று அணிந்து கொண்ட 'சூ'
வெளிறிப் பொலிவிளந்து கிடக்கிறது
துடைத்துவிடாத நேற்றயப் புழுதி.








றாக்கை நிறைய 
புழுதி படிந்த தடித்த புத்தகங்கள்
சிலந்தி கறையான் பூச்சிகளைத் தவிர
அறையில் எவருமில்லை.





மேசையிலிருந்த குப்பைத் தொட்டியில்
எழுதப்படாத காகிதங்கள் எல்லாம்
கசங்கிக் கிடக்கின்றன.     
 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

1 comments:

பாஹிம் said...

அழகு

Post a Comment