By Nasenkural.blogspot.com. Powered by Blogger.
RSS

சஞ்சலமும் கொஞ்சம் ஆறுதலும்

மணற் பரப்பை கந்தலாக்கிக் கிடக்கும்
சிகரட் பெட்டிகள்,
முனை கருகிய ஃபில்டர்கள்,
விரல் சுடுமளவு எரியவிடப்பட்ட
ரஜனி பீடிகளின் நுணித் துண்டுகளிடமிருந்து


உயிர் குடித்த வெறியின்
உளறல்
அடங்கிப் போன பின்பான
நிசப்தத்தைக் கேட்டு
மனம் சஞ்சலப்பட்டாலும்


அவைகளின்
உற்பத்தி,வினியோக விற்பனையை ஒட்டிய
பலரின் வாழ்வாதாரக் கிடைப்பின்
முனகல் சப்தம்
கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறது. 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment