By Nasenkural.blogspot.com. Powered by Blogger.
RSS

குறுக்கீடுகளால்

வாகன ஓட்டுதலின் போது
சிறகசைத்து அலையும்
சிறு தும்பி , வண்ணாத்திகளின்
குறுக்கிடுகளும்
மனதை பதைக்கச் செய்துவிடுகின்றன;
என் உயிரின் நடு மண்டையை நோக்கி
யாரோ சுத்தியலால்
பட்டுவிடாமல் ஓங்கி யோங்கி
பதறச் செய்வதைப் போல...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment