By Nasenkural.blogspot.com. Powered by Blogger.
RSS

சஞ்சலமும் கொஞ்சம் ஆறுதலும்

மணற் பரப்பை கந்தலாக்கிக் கிடக்கும்
சிகரட் பெட்டிகள்,
முனை கருகிய ஃபில்டர்கள்,
விரல் சுடுமளவு எரியவிடப்பட்ட
ரஜனி பீடிகளின் நுணித் துண்டுகளிடமிருந்து


உயிர் குடித்த வெறியின்
உளறல்
அடங்கிப் போன பின்பான
நிசப்தத்தைக் கேட்டு
மனம் சஞ்சலப்பட்டாலும்


அவைகளின்
உற்பத்தி,வினியோக விற்பனையை ஒட்டிய
பலரின் வாழ்வாதாரக் கிடைப்பின்
முனகல் சப்தம்
கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறது. 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நடித்தல் நிர்ப்பந்தமகிவிடும்

உட்கிடைகளை
முழு நிர்வாணமாக வெளிப்படுத்தும்
தெளிந்த நீரோடையைப் போல
மனதை இயன்றளவு வெளிப்படுத்தினாலும்
மறைத்தல் பற்றிய நாடகத்தின்
ஒரு பாத்திரத்தை ஏற்றிருப்பதாகவே
நெருங்கிப் பழகுபவர்களும்
புரிந்துகொள்வது குறித்த கவலைகள்
அவ்வப்போது
கலக்கமுறச் செய்துவிடுகிறது.


மறைத்தலே
வாழ்வாகிப் போனவர்களிடமிருந்து
இதனைவிட
வேறெதனை எதிர்பார்க்க முடியும்..?


இத்தகையதொரு சமூகத்தில்தான்
வாழ வேண்டி சபிக்கப்பட்டிருப்பதால்
காலவோட்டத்தில்
நிஜமாகவே நடிக்கத் துவங்குவது 
நிர்ப்பந்தமாய் ஆகிவிடும்


ஆதலால்
இது குறித்து
இனியும்
நொந்து கொள்வதாயில்லை.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஹைக்கூ -கொஞ்சம் சலனம்-





தூரத்து இருளில்
கலர் கலர் வெளிச்சப் பொட்டுக்கள்
வீடு வாகனம் கடை ஹோட்டல்.








குளத்து நீர்ப்பரப்பில்
சிறு கல் விழுந்த சப்தம்
வானமே திடுக்குற்று விழித்துக் கொண்டது.








ஏற்றிவைத்த விளக்கு அணைந்தது
அறையில் 
புத்தகங்களும் இல்லை கண்களும் இல்லை.








பரந்து விரிந்த நீலச்சுவரில்
உயிரிகளுக்காய் உருவான 3Dஓவியங்கள்
மேகங்கள் அசைகின்றன.








மாரிகாலப் பின்னேரப் பொழுதில்
மரத்தின் கீழ் மட்டும் 
ஒரு நொடி மழைச் சீறல்;
வந்த காகம் கிழையில் குந்தியது.








பாலைவனம் நெடுகிலும்
தன் உயிர் தேடித்திரிகிறான்
நீருமில்லை காணலுமில்லை.








பச்சைக் குச்சித் துண்டின் உசுப்பலால்
இலையொண்று அசைகிறது
பாய்ந்து விழுந்த வெட்டுக் கிளி.








காலை நேரக் காகம்
வீட்டுக் கூரை மீதிருந்து கத்துகிறது
வீட்டில் எவருமில்லை.








வீதியால் வந்தவர்களும் போனவர்களும்
வாரிச் சுறுட்டிக்கொண்டு ஓடி ஒதுங்குகிறார்கள்
காற்றும் மழையும் கைகலப்பு.








பரபரத்த இரவின் 
நகரவெளி மீதான அசைவு
உறைந்த அடுத்த நொடி உடைகிறது;
மின்சாரத்தின் கண்சிமிட்டல்.








கெளிந்த தோணியின் 
கிளம்பிய கொல்லாவிலிருந்து கூப்பாடு
குந்தியிருந்த காகம் கத்துகிறது.








இன்று அணிந்து கொண்ட 'சூ'
வெளிறிப் பொலிவிளந்து கிடக்கிறது
துடைத்துவிடாத நேற்றயப் புழுதி.








றாக்கை நிறைய 
புழுதி படிந்த தடித்த புத்தகங்கள்
சிலந்தி கறையான் பூச்சிகளைத் தவிர
அறையில் எவருமில்லை.





மேசையிலிருந்த குப்பைத் தொட்டியில்
எழுதப்படாத காகிதங்கள் எல்லாம்
கசங்கிக் கிடக்கின்றன.     
 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

குறுக்கீடுகளால்

வாகன ஓட்டுதலின் போது
சிறகசைத்து அலையும்
சிறு தும்பி , வண்ணாத்திகளின்
குறுக்கிடுகளும்
மனதை பதைக்கச் செய்துவிடுகின்றன;
என் உயிரின் நடு மண்டையை நோக்கி
யாரோ சுத்தியலால்
பட்டுவிடாமல் ஓங்கி யோங்கி
பதறச் செய்வதைப் போல...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தன்னிலை குறித்த புரிதல்

ஸ்.ராமகிறுஷ்ணனின் எழுத்துகளுக்கு நான் எப்பொழுதும் அடம் பிடிக்கும் குழந்தை தான்.பொம்மை கேட்டு அடம் பிடிப்பது போல் அவர் எழுத்துக்களை ஸ்பரிசித்துப் பார்த்துவிட காலத்திடம் கெஞ்சி வற்புறுத்தி வேண்டுகோள்களால் பரிதாபப்பட வைத்துவிடுவேன். மனமிரங்கிய காலமும் எனக்குரிய அத்தனை வேலைகளையும் இடையில் புகுந்து விடாமல் ஒரு மூலையைப் பார்த்து ஒதுக்கித் தள்ளிவைத்து விடும்.

இலக்கிய ஆர்வமும் , ராமகிறுஷ்ணனின் எழுத்துக்கள் மீதான ஆர்வமும் நண்பன் பூவனிடமிருந்து ஒட்டுண்ணியைப் போல் என்னில் இறுக்கமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டு எனதான மற்றைய பல விடயத்துவங்களையும் ஏனையவற்றின் மீதான ஈடுபாடு, கரிசனை, கால நேரம் என்று அத்தனையையும் உறிஞ்சி இன்றைய என் நினைவுகளை ஆக்கிரமித்து நிற்கின்றன.

ஆடு,மாடு மேய்ப்பதென்றாலும் அரசாங்கத்தின் மாடுகளைத்தான் மேய்த்தாக வேண்டும் என்ற கண்டிப்பான எதிர்பார்ப்புகளால் நிர்மாணிக்கப்பட்ட சமூக அமைப்பில் வாழவேண்டிய நிர்ப்பந்தம் , எனதான இலக்கிய ஆர்வத்துடன் அடிக்கடி சண்டை போட்டு மனப்பரப்பில் வெறுமை நிலையை உருவாக்கி விரக்த்தி வெளியில் கைவிட்டு விடுகின்றன.பன்றிகளைப் பராமரிக்கும் வேலை என்றாலும் பரவாயில்லை அரசாங்க வேலை ஏதும் காலியாக இருந்தால் தயை கூர்ந்து அறிவித்து விடுங்கள்...

நேற்றிரவும் அப்படித்தான... ஆழ்கடல் இறங்கி மிகுந்த அவதானத்தோடு சுழியோடும் மனோ நிலையில் ஸ்.ராமகிறுஷ்ணனின் எழுத்துகளுக்கும் அவைகள் வெளிப்படுத்தி நிற்கும் கருத்தியல்களுக்குமிடையே மூழ்கி அலைந்து கொண்டிருந்தேன்...

இப்பொழுதெல்லாம் எதைப் பற்றி வாசித்தாலும் வாசிப்பு நிகழும் பொழுதே வாசிக்கப் படும் அத்தனையும் ஒன்றுவிடாமல் காட்சிப் படிமங்களாக மனதில் அசைந்து அலைகின்றன.விபரிக்கப்படும் இடங்கள், சம்பவங்கள், உணர்வுகள் என்று எல்லாவற்றையும் இயற்கையான ஈரலிப்புடன் ஸ்பரிசித்துப் பார்க்கின்றன.அப்படித்தான் ஸ்பரிசித்துக் கொண்டிருந்தேன்..

ஆழ்ந்த தியானத்தில் நிசப்த வெளிகளின் மீது பயணித்துக் கொண்டிருப்பவனை உசுப்பிப் பார்க்கும் விதத்திலான ஒரு குரல் திடுமெனத் தாக்கி அமைதியைக் குலைத்து புத்தகத்தை விட்டும் கண்களைத் திருப்பிவிட்டன.

"புத்தகத்துக்குள்ள அப்படி என்னத்த மறச்சி வச்சிக்கி கடுமையா பாத்துக்கிருக்கயள்?"

என் சிந்தனை நரம்பின் தொடர்ச்சியை தறித்து வலியை ஏற்படுத்திய குரலுக்கு உரிமையாளன், எங்கள் முன் வீட்டில் குடியிருப்பவன்.36km தூரம் தள்ளி இருக்கும் ஊரான 'காத்தான் குடியைச்' சேர்ந்தவன்.எங்கட ஊரில் உள்ள ஒரு உடுப்புக் கடையில் வேலை பார்க்கும் பொடியன்.இரவு எட்டரை மணி தாண்ட நேராக வீட்டுக்குத்தான் வருவான்.பேச ஆள் கிடைக்காவிட்டால் என்னுடன் தான் எதையாவது பேசிக்கொண்டு கரைச்சல் படுத்துவான்.சிலநாட்களுக்கு முன்புதான் தெரியவந்தது அவன் ஒரு "பொடியன் மாஸ்டர்" என்று .அவனுடன் சகஜமாக சிரித்துப் பேசும் என் தம்பியையும் எனி ஜாக்கிரதையாக பாதுகாக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையையும் உருவக்கிவிட்டான் அந்த வளப்புனி.இரவு 9.00மணியளவில் எங்கள் ரோட்டின் தொங்கலில் அமைந்துள்ள கொத்துக் கடைக்குச் சாப்பிடச் சென்றுவிடுவான்.அவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் பிறருக்கு முகம் சுழிக்காமல் உதவி செய்வதை பல முறை கண்டு வியந்திருக்கிறேன்.

தியானம் குலைந்து போன கடுப்பில் "என்னத்த வச்சிக்கிட்டு பாக்கோணும் எண்டு எதிர்பாக்கயள்?" என்று கொஞ்சம் தடிப்பாகவே கேட்டுவிட்டேன்.

"ஒங்களை எல்லாம் லேசில நம்பேலா.."

"நீங்க நம்போணும் என்ற எந்த அவசியமும் எனக்கில்ல"..சற்று மிதப்போடுதான்
என்னிடமிருந்து இந்த பதில் கறாராக வெளிப்பட்டது.

அவன் எதை நினைத்துக் கேட்டிருப்பான் என்று உங்களால் ஊகிக்க முடிகின்றதா..? வேறொன்றுமில்லை பரந்த மனது படைத்த நமீதா மற்றும் லக்ஷ்மிராய் போன்ற உடல் தானப் பிரியைகளின் கொடைகளை நடுப்பக்கத்தில் போட்டு விற்பனையையும், நாக்கு வெளியில் தொங்கும் சிறந்த வாசகர்களையும் சூடு பிடிக்கவைக்கும் நாட்டுக்குகந்த பத்திரிகைகளில் ஏதாவது ஒன்றை மடித்து வைத்துக் கொண்டு கர மைத்துணம் செய்ய ஆயத்தம் ஆகிக்கொண்டிருக்கிறேன் என்ற வெளிக்குத்துதான் அவன் வினவியதன் முழு மொத்த எதிர்பார்ப்பு...

என்னுடைய அந்த பதிலை கொஞ்சமும் எதிர்பார்க்காதவன் , எங்கிருந்தோ வலிந்து இழுத்து எடுத்த நமட்டுச் சிரிப்பொண்றை உதட்டில் அப்பிக் காட்டிவிட்டு கிளம்பிவிட்டான்.

என் பதில் நிச்சயம் அவனை சங்கடப்படுத்தி இருக்கவேண்டும்.என் எதிர்பார்ப்பும் அதுதான்.நான் ஒன்றும் இயேசுவோ மகாத்மாவோ அல்ல; பழிவாங்குவதில் 'நான் மகான் அல்ல' கார்த்திக்கைவிட மோசமானவன்.இந்த மனோநிலையை மாற்றிக் கொளும் படி 'மனசாட்சி' இன்றுவரை 'நான்' என்ற அதீதத்துடன் மல்லுக்கட்டிக் கொண்டுதான் கிடக்கின்றது...

அவன் சென்ற பிறகும் என்னால் தொடர்ந்து படிக்க முடியவில்லை.சொற்ப நொடிக்குள் நிகழ்ந்துவிட்ட அவனுடனான உரையாடல் தான் என் நினைவுப் பாறைகளில் கலடலைகளாக மோதிக்கொண்டன.
"ஒங்கள எல்லாம் லேசில நம்பேலா" இந்த வார்த்தைகள் குறித்தும் அதற்கான என் பதில் குறித்துமே நினைவலைகள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன.

இதுபோன்ற ஏதாவது தொந்தரவான உரையாடல் நிகழ்ந்துவிட்டால் தான் மனம் கார்ல் மாக்ஸ் மாதிரி ஆய்வு செய்யத் துவங்கிவிடும்.

நம் வாழ்க்கையின் எதார்த்தத்தை அலசிப் பார்த்தால்... நம்மில் பலரும் மற்றவர்கள் நம்மை நம்ப வேண்டும் என்பதற்காகத்தான் போலியாக இயங்கிக் கொன்டிருக்கிறார்கள்.தங்களைச் சுற்றிலும் பொதுப் புத்தியின் வழியிலான புனிதத்தை வலிந்து கட்டமைத்துக் கொண்டும் அதனைக் கஸ்டப்பட்டுக் காப்பாற்றி தக்கவைத்துக் கொண்டும் , பிறரிடம் தன்னைச் சுற்றியுள்ள ஒளிவட்டத்தைக் காட்சிப்படுத்தி நம்பவைப்பதற்காகவமுமே இயன்றமட்டும் பாடுபடுகிறார்கள்.

இந்த மனோநிலையில் உள்ளவனின் குரல் தான் "ஒங்கள எல்லாம் லேசில நம்பேலா" (இப்ப இவன நம்பச் சொல்லி யார் அழுதா?) அவன் என்னைச் சுற்றியுள்ள ஒளி வட்டத்தை நம்பவைக்குமாறு சாடையாச் சொல்கிறான். நானோ இருளின் சினேகிதன்.இருளின் நண்பன் என்பதற்காக ஓளியின் எதிரியாகத்தான் இருக்க வேண்டும் என்று 'டுவலிசப்' போக்கில் என்னைக் கட்டமைத்துவிட வேண்டாம்.

அவனுடைய வினாவிற்கு எந்த ஒரு முன் யோசனையுமின்றி என்னிடமிருந்து வெளிப்பட்ட பதில் " நிங்க நம்போணும் என்ற எந்த அவசியமும் எனக்கில்ல".
உண்மையில் இது ஒரு வகை சுதந்திரத்தை சுட்டி நிற்கும் வாசகம்.எந்த ஒரு நிர்ப்பந்தத்திற்கும் அவசியப்பாட்டிற்கும் கைதாகி சிறைப்பட விரும்பாத மனோநிலையின் வெளிப்பாடு. எதார்த்தத்தில் இது தான் நான்.

நம்முடைய இயல்பான எதார்த்த நிலை இத்தகைய சடுதியான நிகழ்வுகளின் போதுதான் அப்பட்டமாக வெளிப்படுகிறது.இது போன்ற சின்னச் சின்ன சம்பவங்கள் தான் நம்மைப் பற்றி நமக்கே புரியவைத்து விடுகின்றன.

அந்தத் தருணத்தில் 'இது தான் நான் என' புரிந்து கொள்ள உதவி செய்த அவனுக்கு கட்டாயம் நன்றி சொல்லிவிட உறுதி செய்து கொண்டேன். இருந்தாலும் சிறிது தயக்கம்;நன்றி தெரிவித்தபின் 'ராத்திரி ரூமுக்கு வாங்களேன்' என்று அவன் கூப்பிடமால் இருந்தால் சரி.
  

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தேவையான தாக்குதல்தான்

வாழ்க்கைப் பாதை எங்கிலும்
பழக்கப்பட்டதும் அன்னியதுமான
துன்பங்கள் பல
பதுங்கிக் கிடக்கின்றன.


ஒவ்வொண்றும்
கணக்காய்க் காத்துக் கிடந்து
திடுமெனத் தாக்கிவிடுகின்றன
கொரில்லா வாக்கில்...


தாக்குதல்களில் அதிகமானவை
முன்கூட்டியே
தவிர்க்க முடியாதவைகள் தான்..
தேவைப் படுவதெல்லாம்
தாங்கிக் கொள்ளும் தைரியம் தான்..


ஒரு விததில்
இத்தகைய தாக்குதல்கள்
ஓளிக்குத் தேவையான இருள் போல்
அவசியமானதும் தான்..
'இருளை மறுதலித்து
ஓளியை அனுபவித்து விடலாமா என்ன..!..?

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கொணக்கர்கள்...

கொணக்குப் பிடித்த ஒருவனின்
களிசறத்தனம்
தெருவில் கிடந்த
கொங்கிறீட் கல்லிலும்
சற்றுத்தள்ளி
மலம் கழித்துக் கொண்டிருந்த
தெரு நாயிலும்
தாண்டவமாடி விட்டது...


தெறித்து விழுந்த
நாயும் கல்லும்
ரத்த விலிகளுடன்
வெடுக்கெனப் பிரிந்தன.. 


வைத்த குறி தப்பாதது கண்ட
கொணக்கன்
சாதனை செய்த பெருமிதத்தோடு
கிளம்பி விட்டான்..


வலிந்து ரத்தம் பூசப்பட்ட
கொங்கிறீட் கல்லும்
பூசுவதற்கு ரத்தம் கொடுத்துவிட
நிர்ப்பந்திக்கப்பட்ட
தெரு நாயும்
இரு நாள் கடந்த சந்திப்பில்
பேசிக் கொண்டன..


"சில மனிச ஜென்மங்கள்
தங்களோட மசிரைப் புடுங்குவதும் இல்லை
மத்தவங்கட மசிரை விட்டு வைப்பதும் இல்லை"
லொள்...லொள்.....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS