கொணக்குப் பிடித்த ஒருவனின்
களிசறத்தனம்
தெருவில் கிடந்த
கொங்கிறீட் கல்லிலும்
சற்றுத்தள்ளி
மலம் கழித்துக் கொண்டிருந்த
தெரு நாயிலும்
தாண்டவமாடி விட்டது...
தெறித்து விழுந்த
நாயும் கல்லும்
ரத்த விலிகளுடன்
வெடுக்கெனப் பிரிந்தன..
வைத்த குறி தப்பாதது கண்ட
கொணக்கன்
சாதனை செய்த பெருமிதத்தோடு
கிளம்பி விட்டான்..
வலிந்து ரத்தம் பூசப்பட்ட
கொங்கிறீட் கல்லும்
பூசுவதற்கு ரத்தம் கொடுத்துவிட
நிர்ப்பந்திக்கப்பட்ட
தெரு நாயும்
இரு நாள் கடந்த சந்திப்பில்
பேசிக் கொண்டன..
"சில மனிச ஜென்மங்கள்
தங்களோட மசிரைப் புடுங்குவதும் இல்லை
மத்தவங்கட மசிரை விட்டு வைப்பதும் இல்லை"
லொள்...லொள்.....
கொணக்கர்கள்...
Subscribe to:
Post Comments (Atom)






0 comments:
Post a Comment