By Nasenkural.blogspot.com. Powered by Blogger.
RSS

தன்னிலை குறித்த புரிதல்

ஸ்.ராமகிறுஷ்ணனின் எழுத்துகளுக்கு நான் எப்பொழுதும் அடம் பிடிக்கும் குழந்தை தான்.பொம்மை கேட்டு அடம் பிடிப்பது போல் அவர் எழுத்துக்களை ஸ்பரிசித்துப் பார்த்துவிட காலத்திடம் கெஞ்சி வற்புறுத்தி வேண்டுகோள்களால் பரிதாபப்பட வைத்துவிடுவேன். மனமிரங்கிய காலமும் எனக்குரிய அத்தனை வேலைகளையும் இடையில் புகுந்து விடாமல் ஒரு மூலையைப் பார்த்து ஒதுக்கித் தள்ளிவைத்து விடும்.

இலக்கிய ஆர்வமும் , ராமகிறுஷ்ணனின் எழுத்துக்கள் மீதான ஆர்வமும் நண்பன் பூவனிடமிருந்து ஒட்டுண்ணியைப் போல் என்னில் இறுக்கமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டு எனதான மற்றைய பல விடயத்துவங்களையும் ஏனையவற்றின் மீதான ஈடுபாடு, கரிசனை, கால நேரம் என்று அத்தனையையும் உறிஞ்சி இன்றைய என் நினைவுகளை ஆக்கிரமித்து நிற்கின்றன.

ஆடு,மாடு மேய்ப்பதென்றாலும் அரசாங்கத்தின் மாடுகளைத்தான் மேய்த்தாக வேண்டும் என்ற கண்டிப்பான எதிர்பார்ப்புகளால் நிர்மாணிக்கப்பட்ட சமூக அமைப்பில் வாழவேண்டிய நிர்ப்பந்தம் , எனதான இலக்கிய ஆர்வத்துடன் அடிக்கடி சண்டை போட்டு மனப்பரப்பில் வெறுமை நிலையை உருவாக்கி விரக்த்தி வெளியில் கைவிட்டு விடுகின்றன.பன்றிகளைப் பராமரிக்கும் வேலை என்றாலும் பரவாயில்லை அரசாங்க வேலை ஏதும் காலியாக இருந்தால் தயை கூர்ந்து அறிவித்து விடுங்கள்...

நேற்றிரவும் அப்படித்தான... ஆழ்கடல் இறங்கி மிகுந்த அவதானத்தோடு சுழியோடும் மனோ நிலையில் ஸ்.ராமகிறுஷ்ணனின் எழுத்துகளுக்கும் அவைகள் வெளிப்படுத்தி நிற்கும் கருத்தியல்களுக்குமிடையே மூழ்கி அலைந்து கொண்டிருந்தேன்...

இப்பொழுதெல்லாம் எதைப் பற்றி வாசித்தாலும் வாசிப்பு நிகழும் பொழுதே வாசிக்கப் படும் அத்தனையும் ஒன்றுவிடாமல் காட்சிப் படிமங்களாக மனதில் அசைந்து அலைகின்றன.விபரிக்கப்படும் இடங்கள், சம்பவங்கள், உணர்வுகள் என்று எல்லாவற்றையும் இயற்கையான ஈரலிப்புடன் ஸ்பரிசித்துப் பார்க்கின்றன.அப்படித்தான் ஸ்பரிசித்துக் கொண்டிருந்தேன்..

ஆழ்ந்த தியானத்தில் நிசப்த வெளிகளின் மீது பயணித்துக் கொண்டிருப்பவனை உசுப்பிப் பார்க்கும் விதத்திலான ஒரு குரல் திடுமெனத் தாக்கி அமைதியைக் குலைத்து புத்தகத்தை விட்டும் கண்களைத் திருப்பிவிட்டன.

"புத்தகத்துக்குள்ள அப்படி என்னத்த மறச்சி வச்சிக்கி கடுமையா பாத்துக்கிருக்கயள்?"

என் சிந்தனை நரம்பின் தொடர்ச்சியை தறித்து வலியை ஏற்படுத்திய குரலுக்கு உரிமையாளன், எங்கள் முன் வீட்டில் குடியிருப்பவன்.36km தூரம் தள்ளி இருக்கும் ஊரான 'காத்தான் குடியைச்' சேர்ந்தவன்.எங்கட ஊரில் உள்ள ஒரு உடுப்புக் கடையில் வேலை பார்க்கும் பொடியன்.இரவு எட்டரை மணி தாண்ட நேராக வீட்டுக்குத்தான் வருவான்.பேச ஆள் கிடைக்காவிட்டால் என்னுடன் தான் எதையாவது பேசிக்கொண்டு கரைச்சல் படுத்துவான்.சிலநாட்களுக்கு முன்புதான் தெரியவந்தது அவன் ஒரு "பொடியன் மாஸ்டர்" என்று .அவனுடன் சகஜமாக சிரித்துப் பேசும் என் தம்பியையும் எனி ஜாக்கிரதையாக பாதுகாக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையையும் உருவக்கிவிட்டான் அந்த வளப்புனி.இரவு 9.00மணியளவில் எங்கள் ரோட்டின் தொங்கலில் அமைந்துள்ள கொத்துக் கடைக்குச் சாப்பிடச் சென்றுவிடுவான்.அவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் பிறருக்கு முகம் சுழிக்காமல் உதவி செய்வதை பல முறை கண்டு வியந்திருக்கிறேன்.

தியானம் குலைந்து போன கடுப்பில் "என்னத்த வச்சிக்கிட்டு பாக்கோணும் எண்டு எதிர்பாக்கயள்?" என்று கொஞ்சம் தடிப்பாகவே கேட்டுவிட்டேன்.

"ஒங்களை எல்லாம் லேசில நம்பேலா.."

"நீங்க நம்போணும் என்ற எந்த அவசியமும் எனக்கில்ல"..சற்று மிதப்போடுதான்
என்னிடமிருந்து இந்த பதில் கறாராக வெளிப்பட்டது.

அவன் எதை நினைத்துக் கேட்டிருப்பான் என்று உங்களால் ஊகிக்க முடிகின்றதா..? வேறொன்றுமில்லை பரந்த மனது படைத்த நமீதா மற்றும் லக்ஷ்மிராய் போன்ற உடல் தானப் பிரியைகளின் கொடைகளை நடுப்பக்கத்தில் போட்டு விற்பனையையும், நாக்கு வெளியில் தொங்கும் சிறந்த வாசகர்களையும் சூடு பிடிக்கவைக்கும் நாட்டுக்குகந்த பத்திரிகைகளில் ஏதாவது ஒன்றை மடித்து வைத்துக் கொண்டு கர மைத்துணம் செய்ய ஆயத்தம் ஆகிக்கொண்டிருக்கிறேன் என்ற வெளிக்குத்துதான் அவன் வினவியதன் முழு மொத்த எதிர்பார்ப்பு...

என்னுடைய அந்த பதிலை கொஞ்சமும் எதிர்பார்க்காதவன் , எங்கிருந்தோ வலிந்து இழுத்து எடுத்த நமட்டுச் சிரிப்பொண்றை உதட்டில் அப்பிக் காட்டிவிட்டு கிளம்பிவிட்டான்.

என் பதில் நிச்சயம் அவனை சங்கடப்படுத்தி இருக்கவேண்டும்.என் எதிர்பார்ப்பும் அதுதான்.நான் ஒன்றும் இயேசுவோ மகாத்மாவோ அல்ல; பழிவாங்குவதில் 'நான் மகான் அல்ல' கார்த்திக்கைவிட மோசமானவன்.இந்த மனோநிலையை மாற்றிக் கொளும் படி 'மனசாட்சி' இன்றுவரை 'நான்' என்ற அதீதத்துடன் மல்லுக்கட்டிக் கொண்டுதான் கிடக்கின்றது...

அவன் சென்ற பிறகும் என்னால் தொடர்ந்து படிக்க முடியவில்லை.சொற்ப நொடிக்குள் நிகழ்ந்துவிட்ட அவனுடனான உரையாடல் தான் என் நினைவுப் பாறைகளில் கலடலைகளாக மோதிக்கொண்டன.
"ஒங்கள எல்லாம் லேசில நம்பேலா" இந்த வார்த்தைகள் குறித்தும் அதற்கான என் பதில் குறித்துமே நினைவலைகள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன.

இதுபோன்ற ஏதாவது தொந்தரவான உரையாடல் நிகழ்ந்துவிட்டால் தான் மனம் கார்ல் மாக்ஸ் மாதிரி ஆய்வு செய்யத் துவங்கிவிடும்.

நம் வாழ்க்கையின் எதார்த்தத்தை அலசிப் பார்த்தால்... நம்மில் பலரும் மற்றவர்கள் நம்மை நம்ப வேண்டும் என்பதற்காகத்தான் போலியாக இயங்கிக் கொன்டிருக்கிறார்கள்.தங்களைச் சுற்றிலும் பொதுப் புத்தியின் வழியிலான புனிதத்தை வலிந்து கட்டமைத்துக் கொண்டும் அதனைக் கஸ்டப்பட்டுக் காப்பாற்றி தக்கவைத்துக் கொண்டும் , பிறரிடம் தன்னைச் சுற்றியுள்ள ஒளிவட்டத்தைக் காட்சிப்படுத்தி நம்பவைப்பதற்காகவமுமே இயன்றமட்டும் பாடுபடுகிறார்கள்.

இந்த மனோநிலையில் உள்ளவனின் குரல் தான் "ஒங்கள எல்லாம் லேசில நம்பேலா" (இப்ப இவன நம்பச் சொல்லி யார் அழுதா?) அவன் என்னைச் சுற்றியுள்ள ஒளி வட்டத்தை நம்பவைக்குமாறு சாடையாச் சொல்கிறான். நானோ இருளின் சினேகிதன்.இருளின் நண்பன் என்பதற்காக ஓளியின் எதிரியாகத்தான் இருக்க வேண்டும் என்று 'டுவலிசப்' போக்கில் என்னைக் கட்டமைத்துவிட வேண்டாம்.

அவனுடைய வினாவிற்கு எந்த ஒரு முன் யோசனையுமின்றி என்னிடமிருந்து வெளிப்பட்ட பதில் " நிங்க நம்போணும் என்ற எந்த அவசியமும் எனக்கில்ல".
உண்மையில் இது ஒரு வகை சுதந்திரத்தை சுட்டி நிற்கும் வாசகம்.எந்த ஒரு நிர்ப்பந்தத்திற்கும் அவசியப்பாட்டிற்கும் கைதாகி சிறைப்பட விரும்பாத மனோநிலையின் வெளிப்பாடு. எதார்த்தத்தில் இது தான் நான்.

நம்முடைய இயல்பான எதார்த்த நிலை இத்தகைய சடுதியான நிகழ்வுகளின் போதுதான் அப்பட்டமாக வெளிப்படுகிறது.இது போன்ற சின்னச் சின்ன சம்பவங்கள் தான் நம்மைப் பற்றி நமக்கே புரியவைத்து விடுகின்றன.

அந்தத் தருணத்தில் 'இது தான் நான் என' புரிந்து கொள்ள உதவி செய்த அவனுக்கு கட்டாயம் நன்றி சொல்லிவிட உறுதி செய்து கொண்டேன். இருந்தாலும் சிறிது தயக்கம்;நன்றி தெரிவித்தபின் 'ராத்திரி ரூமுக்கு வாங்களேன்' என்று அவன் கூப்பிடமால் இருந்தால் சரி.
  

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தேவையான தாக்குதல்தான்

வாழ்க்கைப் பாதை எங்கிலும்
பழக்கப்பட்டதும் அன்னியதுமான
துன்பங்கள் பல
பதுங்கிக் கிடக்கின்றன.


ஒவ்வொண்றும்
கணக்காய்க் காத்துக் கிடந்து
திடுமெனத் தாக்கிவிடுகின்றன
கொரில்லா வாக்கில்...


தாக்குதல்களில் அதிகமானவை
முன்கூட்டியே
தவிர்க்க முடியாதவைகள் தான்..
தேவைப் படுவதெல்லாம்
தாங்கிக் கொள்ளும் தைரியம் தான்..


ஒரு விததில்
இத்தகைய தாக்குதல்கள்
ஓளிக்குத் தேவையான இருள் போல்
அவசியமானதும் தான்..
'இருளை மறுதலித்து
ஓளியை அனுபவித்து விடலாமா என்ன..!..?

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கொணக்கர்கள்...

கொணக்குப் பிடித்த ஒருவனின்
களிசறத்தனம்
தெருவில் கிடந்த
கொங்கிறீட் கல்லிலும்
சற்றுத்தள்ளி
மலம் கழித்துக் கொண்டிருந்த
தெரு நாயிலும்
தாண்டவமாடி விட்டது...


தெறித்து விழுந்த
நாயும் கல்லும்
ரத்த விலிகளுடன்
வெடுக்கெனப் பிரிந்தன.. 


வைத்த குறி தப்பாதது கண்ட
கொணக்கன்
சாதனை செய்த பெருமிதத்தோடு
கிளம்பி விட்டான்..


வலிந்து ரத்தம் பூசப்பட்ட
கொங்கிறீட் கல்லும்
பூசுவதற்கு ரத்தம் கொடுத்துவிட
நிர்ப்பந்திக்கப்பட்ட
தெரு நாயும்
இரு நாள் கடந்த சந்திப்பில்
பேசிக் கொண்டன..


"சில மனிச ஜென்மங்கள்
தங்களோட மசிரைப் புடுங்குவதும் இல்லை
மத்தவங்கட மசிரை விட்டு வைப்பதும் இல்லை"
லொள்...லொள்.....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இதுவும் மாறிவிடும்

வீதியோரப் புழுதிக்குள்
சொறி நாய்களுடன் சொறியர்களாய்
சுறுண்டு கிடக்கும்
அந்த ஜீவன்களைப் பார்த்துவிட்டு
இதுவும் மாறிவிடும்...
           
                   *                    *                   *                  *

அறுநூறிலிருந்து 
இருநூறிற்கு இறங்கி வந்து
வருமாறு கெஞ்சிய
அவள் மனவெதனம் அறியாது
வேசையென்று விரட்டியடித்த
என் நண்பன்,
விரக்தியுடன் விட்டகண்ற
அந்தப் பெண்
இருவரையும் பார்த்துவிட்டு
இதுவும் மாறிவிடும்...
                 
                       *                  *                  *                      *

திருமணச் சந்தையில்
தம் மகன்களின் குறியை
ஆர்வத்தோடு ஏலம் போடும்
பெற்றோரகள்,

தம் மகள்களின் வாய்க்குள்
கிராக்கியான ஏலத்தைத்தான்
திணிக்க வேண்டும்-என்ற
இலட்சியத் தாகத்தோடு
போட்டி போடும் பெற்றோரகள்,
இவர்களையும் பார்த்துவிட்டு
இதுவும் மாறிவிடும்...

               *                    *                      *                       *


ஆசை தீரப் புணர்வதற்கும்
பிள்ளை குட்டிகளை
பேண்டு தள்ளுவதற்கும்
வெடுக்கெடுக்கும் உள்ளாடைகளை
களுவிக் காயப் போடவும்
குசினிக்குள் புளுங்குவதற்கும் தான்
மனைவி என்றெண்ணும் 
கணவர்களையும்


மனம் கல்லாய்ப் போன
கணவனின் காலை
காலமெல்லாம்
கண்ணீரால் கழுவிக் கொண்டு
அவன் காலுக்கடியிலேயே
மிதி பட்டுக் கசங்கும்
மனைவி மண்ணாங் கட்டிகளையும்
பார்த்துவிட்டு
இதுவும் மாறிவிடும்...


                  *                       *                      *                           *

மக்களால் மக்களுக்காக என்று
ஜனநோயகம் பரப்பி
மக்களை மாக்களாக்கும்
அரசியல் வாயாடிகள்,

கறிவேப்பிலையாய்த் தான்
வறுக்கப் படுகிறோம் என்று
தெரிந்தே கருகும் தொண்டர்கள்,

பேயப்படுவது
மூத்திரம் தான் என்று
தெரிந்தே ஆவண்டு பிடிக்கும்
வாக்காளர்கள்,
என்று எல்லோரையும் பார்த்துவிட்டு
இதுவும் மாறிவிடும்...

                *                      *                        *                        *


கோவிலில் இருந்து பள்ளிவாசலுக்கும்
பள்ளிவாசலில் இருந்து பன்சலைக்கும்
பன்சலையில் இருந்து கோவிலுக்கும்
கோவிலில் இருந்து சர்ச்சுகளுக்கும்..
மீண்டும் மீழ்சுழற்ச்சி
எதிர்ச் சுழற்ச்சி, குறுக்குச் சுழற்ச்சி
என்றவாறாக
ஒன்றிலிருந்து இன்னொன்றிற்கும்
ஏனையவற்றிற்கும்-போதாக்குறைக்கு
ஒரு பள்ளிவாசலில் இருந்து பக்கத்து பள்ளிக்கும்
ஒரு கோவிலில் இருந்து அடுத்த கோவிலிற்கு
துப்பாக்கித் தோட்டாக்களையும்
வெடிகுண்டுகளையும்
காணிக்கைகளாக செலுத்திக் கொண்டிருக்கும்
மத வெறியர்கள்,


அவர்கள் வெறியாட்டங்களுக்குள்
சிக்கிச் சப்பழிஞ்சி போகும்
சாதரணங்கள்,
சகலரையும் பார்த்துவிட்டு
இதுவும் மாறிவிடும்...


              *                         *                      *                           *

உடலில் உயிர் ஒட்டியிருப்பதால்
மாத்திரமே
வாழ்ந்து கொண்டிருக்கும்
நானும்
என்போன்ற பலரையும்
பார்த்துவிட்டு
இதுவும் மாறிவிடும்...

                 *                     *                         *                          *            

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மறத்தல் பற்றிய நினைவு

தினமும் நினைக்கிறேன்
அந்த அதனை மறந்துவிட..


அந்த அதுவும் நினைக்கிறது
மறக்காமல் நினைவு படுத்திவிட..


மறத்தலுக்காய் நினைத்ததால்
நினைத்தலில் நனைந்த மறதி
ஈர ஆடை களைய
மறக்க நினைத்த அத்தனையும்
மொத்தமாய் முகம் காட்டுகின்றன..


எனதான
முயற்சிகள் மொத்தமும்
நொடிக்கு நொடி தோல்வியே..!


என் சமாதி மேலாவது
எழுதிவிடுங்கள்
"அவை எதனையும்
இவன் மறந்துவிட்டான்" என்று..!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அணைக்காமல் விட்ட மின்குமிழால்...

யார் உள்ளே..?
எத்தனை முறைதான் கேட்பது
உள்ளே யார்..?


காத்திருந்ததில்,கத்தியதில்
கால் கடுக்க
தொண்டை வலிக்க
மனம் கடுப்பாகி விட்டது.


யார் என்றாலும் பரவாயில்லை
உடன் வெளிக்கு வரவேண்டும்.


இதற்கு மேல் 
கொஞ்சமும் அடக்க முடியாது;
ஆத்திரத்தை அல்ல
முட்டி நிற்கும் மூத்திரத்தை...


உள்ளே இருப்பவர்
என்னுடன் பேசமாட்டாரா..?


ஏன் பதில் எதுவும்
சொல்லவில்லை..?


ஒரு வேளை
உள்ளே யாருமே இல்லையா..?


யாரும் இல்லை என்று
எவரும் சொல்லவில்லையே...


எவரும் சொல்லாத்தால்
யாரும் இல்லையோ...


பின் எதற்காக
எரியும் மின்குமிழ்
இருப்பதாய் சுட்டுகிறது..?..!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தனி உலகில் தனிக்கற ராஜாவாம்

அவன் இயலாமையின் மீது 
சமூகத்து எதிர்பார்ப்புகள் 
உமிழ்ந்து கொண்டிருக்கும் 
எச்சில்களை 
கொஞ்ச மாச்சிலும் 
வழித்து உதறிவிட 
அவனை ஆட்டிப் படைக்கும் 
பொல்லாப் போன சுயம் 
இம்மியளவும் 
இடம் தருவதாய் இல்லை. 

அவனைப் பொறுத்த வரைக்கும் 
அவன் ஒரு தனி உலகாம் 
அவன் சுயம் 
அவ்வுலகத்து தனிக்கற ராஜாவாம் 
ராஜாவின் விருப்பங்கள் தான் 
அவ்வுலகின் நிகழ்வுகளாம்... 

பிறகு எப்படித் தான் 
வேற்றுக் கிரக வாசிகளின் 
எதிர்பார்ப்புகள் 
அவன் உலகில் 
வாழ்வியல் முறைவழியாக முடியும்..? 

அவன் நிலைப்பாடு தான் 
அது என்றான பிறகு 
எந்த சமூகமும் 
காரி உமிழ்ந்தென்ன..? 
முக்கி மூத்திரமே பேய்ந்தென்ன..? 
அவன் சுயம் தான் 
அவை எதையுமே 
உணர விரும்ப வில்லையே... 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS