By Nasenkural.blogspot.com. Powered by Blogger.
RSS

அணைக்காமல் விட்ட மின்குமிழால்...

யார் உள்ளே..?
எத்தனை முறைதான் கேட்பது
உள்ளே யார்..?


காத்திருந்ததில்,கத்தியதில்
கால் கடுக்க
தொண்டை வலிக்க
மனம் கடுப்பாகி விட்டது.


யார் என்றாலும் பரவாயில்லை
உடன் வெளிக்கு வரவேண்டும்.


இதற்கு மேல் 
கொஞ்சமும் அடக்க முடியாது;
ஆத்திரத்தை அல்ல
முட்டி நிற்கும் மூத்திரத்தை...


உள்ளே இருப்பவர்
என்னுடன் பேசமாட்டாரா..?


ஏன் பதில் எதுவும்
சொல்லவில்லை..?


ஒரு வேளை
உள்ளே யாருமே இல்லையா..?


யாரும் இல்லை என்று
எவரும் சொல்லவில்லையே...


எவரும் சொல்லாத்தால்
யாரும் இல்லையோ...


பின் எதற்காக
எரியும் மின்குமிழ்
இருப்பதாய் சுட்டுகிறது..?..!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment