சில சமயங்களில் கண்ணீர்
ஆழம் எட்டாத சோகங்களின்
மொழிபெயர்ப்புகளாய்
சில சமயங்களில்...
வான் எல்லை தொட்டுவிட்ட
பரமதிருப்தியில்
கண்களின் சந்தோஷப் பிரசவங்களாய்
சில சமயங்களில்...
தூசுகளின் அதட்டலால்
பயத்தில் ஒழுகும் மூத்திரமாய்
சில சமயங்களில்...
தன்னைக் கொன்று
உடலைக் கீலங்கீலமாய் குதறியவர்களுக்கு
சிதிலமான வெங்காயங்கள்
உணர்த்துகிற
குற்ற உணர்வின் வலிகளாய்
சில சமயங்களில்...
Subscribe to:
Post Comments (Atom)







0 comments:
Post a Comment