By Nasenkural.blogspot.com. Powered by Blogger.
RSS

முன்முடிவுகளின் விபரீதம்

எதுவும் விளங்கவில்லை
விளங்கிக் கொள்வதற்காக திருகிவிட்ட
மெனக்கடுகள் மொத்தமும் வீணாகின


என்னில் அரங்கேறிய
மொக்குத்தனமான முன்முடிவுகளின் 
பாசாங்குதான்
இவை அத்தனைக்கும் பரம காரணம்


ஓரிரு புத்தகங்கள் வாசிப்பு மட்டுமே போதும்
சகல சமாச்சாரங்களையும்
கையகப்படுத்திவிடலாம் என்ற
'நான்'மீதான அதீதம்...


படிப்பிக்காமல் பசப்பிக் கொண்டுதான் 
இருக்கிறார்கள் என்ற
மற்றயவர்களின் அபிப்பிராயம்...


வகுப்பறையை நேற்றுவரை 
எட்டியும் பார்க்காத நான்
அங்கு போய்வந்தவர்களிடம் 
நிகழ்த்திய விசாரிப்புக்கு
அவனுகளின் போதாமை பிரதிபலிக்கும்
விரக்தியான பதில்கள்...


இது போன்ற
என்னில் அரங்கேறிவிட்ட
முன்முடிவுகளின் மொக்குத்தனம் தான்
இன்றைய வகுப்பில் 
எனதான முயற்சிகள் வீணடிப்பிற்கு
முழுப் பொறுப்பு.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment