By Nasenkural.blogspot.com. Powered by Blogger.
RSS

புரியாமை

உயிருடன் கொண்டு வந்து கொடுத்த 
குளத்து மீனை
நாவுக்கு ருசியாக கறியாக்கித் தரும்
என் தாய்,
விழுந்துடைந்து போன 
தொட்டியில் வாழ்ந்த மீன்களுக்காக
அதிகம் வருத்தப் பட்டதோடு
காரணமான தம்பியையும்
அடித்து அழவைத்தது
ஏன் என்று இன்னும் புரியவில்லை..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment