குட்டி நட்டிகளைக் கூத்தாடவைத்து
கருவாடு காயப் போட்டவனைக் கவலைக்குள்ளாக்கி
தோட்டக்காரனை ஆசுவாசப்படுத்தி
சேரிப்புறத்தை சேறாக்கி நரகலையும் கிளறி
மாட்டைக் குளிப்பாட்டி
கொட்டில் குடிசைகளை எல்லாம் நசலாக்கி
கழுவிக் காயப்போட்ட என் உடுப்பையும்
ஈரத்தொப்பாக்கிவிட்டு
அதன் பாட்டில் கிளம்பிப் போய்விட்டது
எந்தவகையிலும்
என்னிடம் மன்னிப்புக் கேட்காமல்
நெனப்புப் பெருத்த மழை
Subscribe to:
Post Comments (Atom)






0 comments:
Post a Comment