By Nasenkural.blogspot.com. Powered by Blogger.
RSS

நெனப்புப் பெருத்த மழை

குட்டி நட்டிகளைக் கூத்தாடவைத்து
கருவாடு காயப் போட்டவனைக் கவலைக்குள்ளாக்கி
தோட்டக்காரனை ஆசுவாசப்படுத்தி
சேரிப்புறத்தை சேறாக்கி நரகலையும் கிளறி
மாட்டைக் குளிப்பாட்டி
கொட்டில் குடிசைகளை எல்லாம் நசலாக்கி
கழுவிக் காயப்போட்ட என் உடுப்பையும் 
ஈரத்தொப்பாக்கிவிட்டு
அதன் பாட்டில் கிளம்பிப் போய்விட்டது
எந்தவகையிலும் 
என்னிடம் மன்னிப்புக் கேட்காமல்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment