கோர வாழ்வின் வன்மப் பிடியால்
இறுக்கப்பட்ட தொண்டையிலிருந்து
சிக்கித்திணறி வெளிப்படுகிறது
வலியின் வேதனைகளாய்
கசங்கிய கதறல்கள்......
உலகம் அதை
கவிதையின் உச்சம் என்கின்றன
கலையம்சத்தின் அற்புதம் என்கின்றன
இன்னும் சில இஸங்களுடனும்....
எங்கள் வாழ்வின்
வன்மம் விலக்கி கோரம் நீக்க
என்ன செய்துவிடப் போகின்றன....?
ரசிப்பதைத் தவிர..!
Subscribe to:
Post Comments (Atom)







0 comments:
Post a Comment