By Nasenkural.blogspot.com. Powered by Blogger.
RSS

பேக்கயனின் நிறைவேறாத வேண்டும்கள்

விருட்ச வீட்டு நளன்களின்
தலைகோதி இசைமீட்டும் காற்றுடன்
ஆவியாகக் கலக்க வேன்டும்;
வாழ்வை தோழ்மேல் சுமந்து கொண்டு
காலவெளியைக் கடந்து செல்லும்
உழைப்பாளிகளின்
வியர்வையையாவது துவட்டிவிட...


வெண்மேகங்களுடன் மோதி
அதற்குள் அடங்கி ஒடுங்கி
மழைத் துளிகளாக
மண்ணில் விழவேண்டும்;
விவசாயிகளின்
தாகத்தையாவது தணித்துவிட...


இயற்கையுடன் கலந்துரையாடி
பூசாரிகள் பாதிரிகள் பிக்குகள் 
மற்றும் மௌலவிகள் - என
அத்தனை பேருக்கும் 
லஞ்சம் கொடுத்தாவது
இறைவனாகிவிட வேண்டும்;
செத்தபிறகாவது
பிணங்களுக்கிடையில் பேதம் பார்க்காமல்
புதைக்கச் சொல்லி
வேதம் இறக்கிவிட...


இன்னும் எத்தனையோ வேண்டும்கள்
அத்தனையும்
நிராகரிப்பிற்கென்றே ஜனித்த 
அநாதைப் பிச்சைக்காரர்கள்


எதிர்பார்ப்புகள் எல்லாம்
அனுபவங்களின் காய்ந்த சாறாக
நாவில் கசந்து கொண்டுதான் இருக்கின்றன.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment