By Nasenkural.blogspot.com. Powered by Blogger.
RSS

பயத்தினால் பயத்தில் பயத்துடன்

நடிச்சாம்
இறுகிய இருட்டில்
கடற்கரையை அடுத்துள்ள
குப்பைகள் கலைந்த ரோட்டில்
நான் மட்டும் தட்டத்தனியாக...


காற்றுடன் சண்டை போடும்
கடலலைகளது பின்னணி இசையில்
மையவாடியிலிருந்த நாய்களின்
கௌசிப் பேய்ச் சத்தங்கள்...
போதாக் குறைக்கு
காதைக் கனகாட்டுப் படுத்தும்
சில்லூரிகளின் சுல்சுலுப்பு...


வந்தடைந்து 
ஓரிரு நொடி நகர்ந்திடாத போதும்


ஓட்டின் இடுவல் பார்த்துப் புகுந்து
சுவர்வழி கசிந்தொழுகும் மழை நீராய்
என்னுள் நுளைந்த பயம்
கண் கை கால் வாய் வழியாக
கசியத் தொடங்கிவிட்டன...


எனதான அத்தனையையும்
இருக்கிப் பிடித்தும்
உள்ளிருந்த உறுத்தல்
எட்டி எட்டிப் பார்க்கின்றன..


வரும் போதே
லேசாக முடிக்கிய மூத்திரம்
முனையில் முட்டித் தள்ள
மூச்சு விட்டு விடுவித்தாகி விட்டன


நிமிடங்கள் சிலவும்
நடுக்கத்துடன் நகர்ந்துவிட்டன


வரச்சொன்ன வளப்புணியை
இன்னமும் காணவில்லை...


என்ன செய்வது...?
செய்த தவறை மறைக்க
இப்படியும்
கஸ்டப் படவேண்டிய நிலை.. 


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment