By Nasenkural.blogspot.com. Powered by Blogger.
RSS

காற்றில் காணாமல் போனவைகள்

பிசுபிசுத்த சட்டையின் வாடையை
பிறர் சந்தேகம் கொள்ளா வண்ணம்
வியர்த்து வடியும் நெற்றி வியர்வையை
துடைப்பதாக பாசாங்கு செய்து
முகர்ந்து கொண்ட மட்டில்
குமட்டியதை வெளிக்காட்டாமல்
சூம்பிய ஒரு சொத்திக் கையால் 
டக்கன்று 
டிக்கட்டை கிளித்துத் தந்த
அந்தப் பொடியன்,


பட்ஜட்டின் பெரும் பகுதியை
இராணுவ நலனுக்கென்றே ஒதுக்கிவிட்ட
சமாதான விரும்பிகளான அரசாங்கத்தை,
அப்பெரும் பகுதியையும்
'ஏசீ'க்களின் இறக்குமதிக்கு
ஒதுக்கச் சொல்லி நிர்ப்பந்திக்கும்
வெறிபிடித்த வெய்யிலில்,


குடைகளின் கீழ்
பேச்சும் சிரிப்புமாக
பள்ளி கலைந்து செல்லும் மாணவிகள்,


அவனைக் கடக்கையில் உசாராகி
கடந்தபின் 
தன்னை ஒரு முறை பார்த்து
விட்ட பெருமூச்சுடன்
அவனது
பலயுகக் கணக்கு ஏக்கங்களும்
யாருமே கண்டு கொள்ளாத ஆசைகளும்
சேர்ந்தே காற்றில் கரைந்தன.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment