தம்பியுடன் மல்லுக்கட்டி
மோட்டார்சைக்கிள் கைப்பற்றப்பட்டது.
இனி சுற்றித்திரிய வேண்டும்
'யாருடன் சேர்ந்து?' என்பதே
என்னை எதிர்கொண்ட பெரிய சவால்...
தேடிச்சென்ற நண்பனும் வெளியூரில்
எனக்கிருந்த நட்பும் அவனுடன் மட்டும்தான்
கடற்கரையையும் அலசியாகிவிட்டது
தெரிந்த முகம் எதுவுமில்லை
அன்றுதான் புரிந்தது
என் நட்புறவாடலின் சீத்துவம்...
சுறுக்காகவே வீட்டை அடைந்தேன்.
தம்பியின் முகத்தில் சந்தோஷத் ததும்பல்
அவனுக்குத்தான் எத்தனை நண்பர்கள்..!!!!
இப்பொழுதெல்லாம்
மோட்டார் சைக்கிளுக்காக மட்டுமல்ல
வேறு எதற்காகவும்
அவனுடன் மல்லுக்கட்டுவதில்லை
அவன் மோட்டார் சைக்கிளை
'ஸ்டாட்'பண்ணும் சத்தம்
என் இயலாமையின் மீதான
AK47 தாக்குதல் சத்தமாகவே
மனதை நெருவலாக்குகின்றன...
Subscribe to:
Post Comments (Atom)







0 comments:
Post a Comment