By Nasenkural.blogspot.com. Powered by Blogger.
RSS

தனிமையும் கலைக்கப்படும்



என் கை ரோமங்களுக்கிடையே
தனிமையில்
உன்னிப்பாக உணவு தேடும்
எறும்பு...


கறண்டுக் கம்பி மேல்
ஒத்தையாக நின்று கொண்டு
கத்திக்கத்தியே
என்னைக் கடுப்பாக்கும்
காகம்.

நீர்ப்பரப்பில்
தன் கூட்டத்தைக் கைவிட்டு
ஏகமாய் 
அசைந்து அலையும் ஆத்துவாழை,
அதில் ஒத்தையாக குடியிருக்கும்
ஊதாப்பூ...


கடலலை கரைசேர்த்து விட்ட
எவளோ ஒருத்தியின்
ஒத்தைச் செருப்பு...


இன்று எல்லாமே
என்னைப் போல்
தனிமையில் ஒத்தையாக...


நாளை 
என் தனிமையும் கலைக்கப்படும்...


நானும்
எறும்புக் கூட்டத்துடன் கூடித்திரிவேன்..
காகங்களுடன் காகங்களாக 'காக்காக்' கத்துவேன்..
ஆத்துவாழைகளுடன் அலைந்து திரிவேன்..
ஒத்தைச் செருப்புடன்
என் சப்பாத்தையும் மாட்டிக் கொண்டு
ஊர் லாத்துவேன்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment