இருட்டியிருந்த அறையில்
மேசை மின்விளக்கை 'ஓண்' பண்ணிவிட்டு
டயரியைத் திறக்கத் துவங்கியதுதான் தாமதம்
அருகிலிருந்த கடிகார முள்
'வலம் இடமாக' நினைவுச் சொத்தையில்
அறைய ஆரம்பித்து
ஒரு புள்ளியில் இடறிவிழுந்தது.
மறுகணம்
மீண்டும் 'இடம் வலமாக' விளாசத் துவங்கியது...
தொடர்ந்தேர்ச்சையான அறைதல்களின் வலிகள்
கண்ணீராக
பேனையின் வழியே தாழ்களில் விழுந்து காய்ந்தன.
அறைதல் ஓய்ந்த தருணம்
அள்ளி இறைப்பதற்கு மிச்சமின்றி
கண்ணீர் முற்றாக வற்றிவிட்டிருந்தன...
டயரியை மூடிவிட்டு நிமிர்ந்த கணம்
விளக்கு இருளை உமிழத் துவங்கியது
எனக்கோ
எழுதிய பக்கங்களை
கிழித்தெறிவதைத் தவிர
வேறெந்த எண்ணமும் எட்டியும் பார்க்கவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)







0 comments:
Post a Comment