By Nasenkural.blogspot.com. Powered by Blogger.
RSS

நரகலாக்கப்பட்ட ஆசைகள்

ஆற்றங்கரையோரம்
பார்க்கவே அரிகண்டமாக ஒதிங்கிக் கிடக்கும்
நுரைகள் தான்
நரகலாக்கப்பட்ட அவள் ஆசைகள்

அவள் வாழ்க்கை ஆற்றில் 
முகிழ்ந்து மேலெழும்பிய
அத்தனை ஆசை நுரைகளும்
சூழ்ந்திருக்கும் சமூகக் காற்றினால்
அதட்டி உறிக்கி ஒதுக்கப் பட்டுவிடுகின்றன

தொடரும் ஓரங்கட்டப்படுதல்களால்
வீங்கி வெடித்த ஆசைகளின் வெப்புசாரங்கள்
அவளது மன ஓரங்களைச் சுற்றி
இன்னும் நாறிக் கொண்டுதான் இருக்கின்றன.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment