கூவிக் கொண்டு வரும்
மீன்காரன் வரவில்லை
அங்கு மீன்களே இல்லை
இறைச்சிக் கடையை
எட்டிப் பார்த்தாகிவிட்டது
அங்கோ
எலும்பு கூட மிச்சமில்லை
சந்தையை நிறைத்திருக்கும்
மரக்கறிகள்
என்னைக் கண்டுதான்
நக்கல் கிளம்ப நகைக்கின்றன
மரக்கறி உடலுக்கு நலம் தான்
மனதுக்குத் தான் கொஞ்சமும் ஆகாது
பரவாயில்லை..
வேறு வழியும் இல்லை..
ஏய்..மனமே..!
உன்னைத்தான்..!
உனக்கு இன்று தண்டனை
அனுபவித்தே ஆகவேண்டும்..







0 comments:
Post a Comment