By Nasenkural.blogspot.com. Powered by Blogger.
RSS

தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும்

கூவிக் கொண்டு வரும்
மீன்காரன் வரவில்லை


மீன் தேடிச் சந்தை சென்றால்
அங்கு மீன்களே இல்லை


இறைச்சிக் கடையை
எட்டிப் பார்த்தாகிவிட்டது
அங்கோ 
எலும்பு கூட மிச்சமில்லை


சந்தையை நிறைத்திருக்கும்
மரக்கறிகள்
என்னைக் கண்டுதான் 
நக்கல் கிளம்ப நகைக்கின்றன


மரக்கறி உடலுக்கு நலம் தான்
மனதுக்குத் தான் கொஞ்சமும் ஆகாது


பரவாயில்லை..
வேறு வழியும் இல்லை..


ஏய்..மனமே..!
உன்னைத்தான்..!
உனக்கு இன்று தண்டனை
அனுபவித்தே ஆகவேண்டும்..















  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment